பொள்ளாச்சியில் மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணித்ததை கண்டித்து தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் காதில் பூ அணிந்து நூதன முறையில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடத்தினர்.
கோவை: பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணித்ததை கண்டித்து தந்தை பெரியார் திராவிட கழகம் மற்றும் பல்வேறு அரசியல், சமூக இயக்கங்கள் சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் இராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பங்கேற்பாளர்கள் நாமம் போட்ட பதாகைகளை ஏந்தியவாறும், காதில் பூவை சுற்றிக் கொண்டும் நூதன முறையில் எதிர்ப்பை தெரிவித்தனர்.

போராட்டக்காரர்கள் "தமிழ்நாட்டுக்கு கோவிந்தா, பாஜகவுக்கு கோவிந்தா, தமிழ்நாடு திட்டங்களுக்கு கோவிந்தா" என்ற கோஷங்களை எழுப்பினர்.

இந்த நூதன எதிர்ப்பு போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் இராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பங்கேற்பாளர்கள் நாமம் போட்ட பதாகைகளை ஏந்தியவாறும், காதில் பூவை சுற்றிக் கொண்டும் நூதன முறையில் எதிர்ப்பை தெரிவித்தனர்.
போராட்டக்காரர்கள் "தமிழ்நாட்டுக்கு கோவிந்தா, பாஜகவுக்கு கோவிந்தா, தமிழ்நாடு திட்டங்களுக்கு கோவிந்தா" என்ற கோஷங்களை எழுப்பினர்.
இந்த நூதன எதிர்ப்பு போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.