கோவை காளப்பட்டி நேருநகரில் Dr.A.P.J அப்துல் கலாம் கல்வி மற்றும் மக்கள் நல அறக்கட்டளையின் 9ஆம் ஆண்டு நினைவு நாள் விழாவில் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் குழந்தைகளுக்கான பயிற்சி நிலையத்தை தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கோவை: கோவை காளப்பட்டி பகுதி நேருநகரில் Dr.A.P.J அப்துல் கலாம் கல்வி மற்றும் மக்கள் நல அறக்கட்டளை சார்பில் 9ஆம் ஆண்டு நினைவு நாள் விழா இன்று (ஜூலை 27) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கோவை கவுண்டம்பாளையம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் கலந்து கொண்டார். அவர் சமுதாய கூடத்தில் குழந்தைகளுக்கான பயிற்சி நிலையத்தை தொடங்கி வைத்தார். மேலும், குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் நிர்வாகிகள், கழக மாவட்ட, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கோவை கவுண்டம்பாளையம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் கலந்து கொண்டார். அவர் சமுதாய கூடத்தில் குழந்தைகளுக்கான பயிற்சி நிலையத்தை தொடங்கி வைத்தார். மேலும், குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் நிர்வாகிகள், கழக மாவட்ட, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.