கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் காலமான முன்னாள் பாஜக எம்.பி மாஸ்டர் மாதன் (93) உடலுக்கு ஜார்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அஞ்சலி செலுத்தினர்.
கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள பாலாஜி கார்டனில் காலமான முன்னாள் பாஜக எம்.பி மாஸ்டர் மாதன் உடலுக்கு ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

கோவை, பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பிரஸ் காலனி பாலாஜி கார்டனில் வசித்து வந்த மாஸ்டர் மாதன் (93), அண்மைக்காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, வீட்டில் இருந்தபடி தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், ஜூலை 26 இரவு 11.10 மணிக்கு அவர் காலமானார்.

இச்செய்தி அறிந்த கோவை மாவட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஜூலை 27 காலை மாஸ்டர் மாதன் வீட்டிற்கு வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
கோவை, பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பிரஸ் காலனி பாலாஜி கார்டனில் வசித்து வந்த மாஸ்டர் மாதன் (93), அண்மைக்காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, வீட்டில் இருந்தபடி தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், ஜூலை 26 இரவு 11.10 மணிக்கு அவர் காலமானார்.
இச்செய்தி அறிந்த கோவை மாவட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஜூலை 27 காலை மாஸ்டர் மாதன் வீட்டிற்கு வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.