காளப்பட்டியில் மூதாட்டியை தாக்கி நகை கொள்ளையடித்த காதல் ஜோடி கைது

கோவை காளப்பட்டியில் 80 வயது மூதாட்டியின் வீட்டில் புகுந்து தாக்கி 3 பவுன் நகையை கொள்ளையடித்த காதல் ஜோடி கைது செய்யப்பட்டனர். கொள்ளையடித்த நகை மீட்கப்பட்டது.


கோவை: கோவை காளப்பட்டியில் வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி நகையை கொள்ளையடித்த காதல் ஜோடி கைது செய்யப்பட்டனர்.

காளப்பட்டியில் உள்ள பழைய தபால் அலுவலக வீதியைச் சேர்ந்த நஞ்சம்மாள் (80) என்ற மூதாட்டி நேற்று முன்தினம் பகலில் தனியாக வீட்டில் இருந்தபோது, ஹெல்மெட் அணிந்து வந்த ஒரு வாலிபர் அவரை தாக்கி, அவர் அணிந்திருந்த 3 பவுன் நகையை கொள்ளையடித்து தப்பிச் சென்றார்.

காயமடைந்த நஞ்சம்மாளை அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து கோவில்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து இந்த கொள்ளையை நடத்தியது தெரிய வந்தது.

தீவிர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டையின் பின்னர், காவல்துறையினர் இருவரையும் கைது செய்தனர். கைதான இருவரும் நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த நதியா என்ற நர்மதா (23) மற்றும் அவரது காதலன் காளப்பட்டியைச் சேர்ந்த விக்கி என்ற விக்னேஸ்வரன் (28) என அடையாளம் காணப்பட்டனர்.

விசாரணையில், நர்மதாவின் கணவர் அவரை விட்டுப் பிரிந்து சென்றதால், விக்கியுடன் காதல் ஏற்பட்டு அப்பகுதியில் வீடு எடுத்து தங்கி இருந்தது தெரிய வந்தது. செலவுக்குப் பணம் இல்லாததால் இந்தக் கொள்ளையை நடத்தியுள்ளனர். கைதானவர்களிடமிருந்து 3 பவுன் தங்கச் சங்கிலி மீட்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஜூலை 26 அன்று சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...