வணிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை

கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் கூட்டத்தில், வணிகர்கள் கொலை மற்றும் கடைகளில் கொள்ளை அதிகரிப்பு குறித்து கவலை தெரிவித்தனர். அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்த முடிவு.


Coimbatore: கோவை துடியலூர் பகுதியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் நிர்வாகிகளின் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட வணிகர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சௌந்தர்ராஜன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் டைமன் ராஜா வெள்ளையன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

அவர்கள் தெரிவித்ததாவது, "கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் ரவுடிகளின் தொல்லை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இரண்டு நாட்களுக்கு முன்பு திருப்பத்தூரில் ஒரு வணிகர் கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் வணிகர்கள் கொலை செய்யப்படுவது அதிகரித்துள்ளதால், காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்."



"மேலும், GST அதிகாரிகள் வணிகர்களை தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். இந்த விவகாரத்தை தமிழக அரசு கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, தற்போது உயர்த்தப்பட்டுள்ள மின்சார கட்டணத்தை குறைக்க தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும்," என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

கடைகளில் தொடர் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்தும் அவர்கள் கவலை தெரிவித்தனர். "இதனைத் தடுக்க, வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்தில் பணிபுரிபவர்களின் ஆதார் தரவை தமிழக காவல்துறைக்கு வழங்க வேண்டும். இதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்," என்று அவர்கள் வலியுறுத்தினர்.



"இந்த பிரச்சினைகள் அனைத்தையும் தமிழக அரசு விரைவாக தீர்க்க வேண்டும். இல்லையெனில், தமிழகம் முழுவதும் வணிகர் சங்கங்கள் சார்பில் போராட்டம் நடத்தப்படும்," என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில பொதுச் செயலாளர் சௌந்தர்ராஜன் எச்சரிக்கை விடுத்தார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...