கோவை கார் பந்தயத்தில் கேரள மருத்துவர் மாரடைப்பால் உயிரிழப்பு

கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான ப்ளூ பேண்ட் கார் ரேலி சாம்பியன்ஷிப்பில் கேரள மருத்துவர் பிரேம்லால் மாரடைப்பால் உயிரிழந்தார். பந்தயத்தின் போது திடீர் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டார்.


Coimbatore: கோவை ஆட்டோ ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் நடத்தப்படும் தேசிய அளவிலான ப்ளூ பேண்ட் கார் ரேலி சாம்பியன்ஷிப்பின் மூன்றாவது சுற்றுப் போட்டிகள் கோவை எல் அண்டி பைபாஸ் சாலை அருகே ஜூலை 27 அன்று தொடங்கின. இப்போட்டியில் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பையனூர் அரசு மருத்துவமனையின் நரம்பியல் துறைத் தலைவர் மருத்துவர் பிரேம்லால் (46) பங்கேற்றார்.

போட்டியின் போது, மதியம் 1.30 மணியளவில் அரை மணி நேர சர்வீஸ் பிரேக் விடப்பட்டிருந்தபோது, காரில் இருந்து இறங்கி வரும் பிரேம்லாலுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், மருத்துவர்கள் பரிசோதித்தபோது, பிரேம்லால் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

பிரேம்லால் செட்டிநாடு ஸ்போர்டிங் அணிக்காக மருத்துவர் ரிஷிகேஷுடன் இணைந்து பந்தயத்தில் பங்கேற்றார். கார் ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த பிரேம்லால், பல முக்கிய கார் பந்தயங்களில் கலந்து கொண்டுள்ளார். அவரது மனைவி ஸ்மிஜா அரவிந்தும் மருத்துவர் ஆவார். இவர்களுக்கு விஷ்ணு மற்றும் அனிகா என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த சம்பவம் பிரேம்லாலின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் கார் பந்தயத்தில் பங்கேற்ற அனைவரிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேம்லாலின் உடல் அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து போட்டிகளைத் தொடக்கி வைத்தார். இரண்டு நாட்கள் நடைபெறும் இப்போட்டியில், முதல் நாள் இரண்டு சுற்றுகள் முடிவடைந்த நிலையில் இந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...