கோவை கவுண்டம்பாளையம் பாலன் நகரில் கோவை மாவட்ட வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள் சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழா மற்றும் 33ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் எம்.மோகன் கட்டிடத்தை திறந்து வைத்தார்.
Coimbatore: கோவை கவுண்டம்பாளையம் பாலன் நகரில் கோவை மாவட்ட வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள் சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழா மற்றும் 33ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.மோகன் புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அவர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து விழாவைத் தொடங்கி வைத்து, சங்கம் சார்பில் செய்த சாதனைகள் குறித்து பேசினார்.
மாவட்டத் தலைவர் ஏ.பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாநில கெளரவத் தலைவர் விஜய்நடராஜ், வேளாண் இணை இயக்குநர் வெங்கடாசலம், முன்னாள் கெளரவத்தலைவர் ராமானந்த், கெளரவத்தலைவர் சீதாராமன், மாநில செயலாளர் சத்தியமூர்த்தி, மாநில பொருளாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

மறைந்த டி.வி.நடராஜன் உருவப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிருபர்களிடம் பேசிய மாநிலத் தலைவர் மோகன், தமிழகத்தில் ஒன்னரை கோடி ஏக்கர் நிலங்களில் சாகுபடி நடைபெற்று வருவதாகவும், சுமார் 40 லட்சம் விவசாயிகள் பங்குபெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், 90 சதவீத சாகுபடி இடுபொருட்களை அவர்களது சங்கமே வழங்கி வருவதாகக் கூறினார்.
மாவட்டப் பொருளாளர் செந்தில் கந்தசாமி 2017-23 ஆண்டுகளுக்கான வரவு செலவு கணக்குகளை சமர்ப்பித்தார். மாவட்டச் செயலாளர் டாக்டர் அப்புக்குட்டி ஆண்டறிக்கையை வாசித்தார். புதிய நிர்வாகிகள் பதவியேற்றனர். இறுதியாக தண்டபாணி நன்றியுரை வழங்கினார். இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கோவை மாவட்ட வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
மாவட்டத் தலைவர் ஏ.பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாநில கெளரவத் தலைவர் விஜய்நடராஜ், வேளாண் இணை இயக்குநர் வெங்கடாசலம், முன்னாள் கெளரவத்தலைவர் ராமானந்த், கெளரவத்தலைவர் சீதாராமன், மாநில செயலாளர் சத்தியமூர்த்தி, மாநில பொருளாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மறைந்த டி.வி.நடராஜன் உருவப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிருபர்களிடம் பேசிய மாநிலத் தலைவர் மோகன், தமிழகத்தில் ஒன்னரை கோடி ஏக்கர் நிலங்களில் சாகுபடி நடைபெற்று வருவதாகவும், சுமார் 40 லட்சம் விவசாயிகள் பங்குபெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், 90 சதவீத சாகுபடி இடுபொருட்களை அவர்களது சங்கமே வழங்கி வருவதாகக் கூறினார்.
மாவட்டப் பொருளாளர் செந்தில் கந்தசாமி 2017-23 ஆண்டுகளுக்கான வரவு செலவு கணக்குகளை சமர்ப்பித்தார். மாவட்டச் செயலாளர் டாக்டர் அப்புக்குட்டி ஆண்டறிக்கையை வாசித்தார். புதிய நிர்வாகிகள் பதவியேற்றனர். இறுதியாக தண்டபாணி நன்றியுரை வழங்கினார். இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கோவை மாவட்ட வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.