கோவையில் வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள் சங்கத்தின் புதிய கட்டிடம் திறப்பு

கோவை கவுண்டம்பாளையம் பாலன் நகரில் கோவை மாவட்ட வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள் சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழா மற்றும் 33ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் எம்.மோகன் கட்டிடத்தை திறந்து வைத்தார்.


Coimbatore: கோவை கவுண்டம்பாளையம் பாலன் நகரில் கோவை மாவட்ட வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள் சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழா மற்றும் 33ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.மோகன் புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அவர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து விழாவைத் தொடங்கி வைத்து, சங்கம் சார்பில் செய்த சாதனைகள் குறித்து பேசினார்.

மாவட்டத் தலைவர் ஏ.பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாநில கெளரவத் தலைவர் விஜய்நடராஜ், வேளாண் இணை இயக்குநர் வெங்கடாசலம், முன்னாள் கெளரவத்தலைவர் ராமானந்த், கெளரவத்தலைவர் சீதாராமன், மாநில செயலாளர் சத்தியமூர்த்தி, மாநில பொருளாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.



மறைந்த டி.வி.நடராஜன் உருவப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிருபர்களிடம் பேசிய மாநிலத் தலைவர் மோகன், தமிழகத்தில் ஒன்னரை கோடி ஏக்கர் நிலங்களில் சாகுபடி நடைபெற்று வருவதாகவும், சுமார் 40 லட்சம் விவசாயிகள் பங்குபெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், 90 சதவீத சாகுபடி இடுபொருட்களை அவர்களது சங்கமே வழங்கி வருவதாகக் கூறினார்.

மாவட்டப் பொருளாளர் செந்தில் கந்தசாமி 2017-23 ஆண்டுகளுக்கான வரவு செலவு கணக்குகளை சமர்ப்பித்தார். மாவட்டச் செயலாளர் டாக்டர் அப்புக்குட்டி ஆண்டறிக்கையை வாசித்தார். புதிய நிர்வாகிகள் பதவியேற்றனர். இறுதியாக தண்டபாணி நன்றியுரை வழங்கினார். இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கோவை மாவட்ட வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...