கோவை இராமநாதபுரம் மாநகராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு இலவச இணை சீருடைகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்

கோவை இராமநாதபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் சத்துணவு உண்ணும் மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இலவச இணை சீருடைகளை வழங்கினார். இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Coimbatore: கோவை இராமநாதபுரம், பெருமாள் கோயில் வீதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் சத்துணவு உண்ணும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா இணை சீருடைகளை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி வழங்கினார்.

இந்நிகழ்ச்சி ஜூலை 29 ஆம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் ஆர்.வெற்றிச்செல்வன், சமுக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் அம்பிகா, மத்திய மண்டல தலைவர் மீனாலோகு, கல்விக்குழு தலைவர் மாலதி நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.



மேலும், மாநகராட்சி துணை ஆணையர் மரு.ச.செல்வசுரபி, மாமன்ற உறுப்பினர் முனியம்மாள் மற்றும் பல்வேறு அரசு அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.



இந்த இலவச இணை சீருடை வழங்கும் திட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் முக்கிய முயற்சிகளில் ஒன்றாகும். இது பள்ளி மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கும், அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிப்பதற்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...