மனைவிக்கு உயர் சிகிச்சை கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக முன் கணவர் போராட்டம்

திருப்பூரில் விபத்தால் மூளை இரத்தக் கசிவு ஏற்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய தற்காலிக பணியாளருக்கு உயர் சிகிச்சை கோரி கணவர் மாவட்ட ஆட்சியர் அலுவலக முன் போராட்டம் நடத்தினார். அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் விபத்தால் மூளை இரத்தக் கசிவு ஏற்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய தற்காலிக பணியாளருக்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பாதிக்கப்பட்ட மனைவியை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு கிடத்தி போராட்டத்தில் ஈடுபட்ட கணவரால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் அவினாசி அடுத்த தேவம் பாளையம் பகுதியைச் சேர்ந்த சோழனின் மனைவி ஜோதிலட்சுமி, உடுமலை கணியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக பணியாளராகப் பணியாற்றி வருகிறார். மாற்றுத்திறனாளியான இவர், தனக்கு பணியிடமாறுதல் வேண்டும் என விண்ணப்பித்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக இவருக்கு பணியிடமாறுதல் வழங்கப்படாமல் இருந்து வந்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் பணிக்குச் சென்ற ஜோதிலட்சுமிக்கு விபத்து ஏற்பட்டு மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜோதிலட்சுமி கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும், உடனடியாக அவருக்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், பணி நிரந்தரம் செய்து பணியிடமாறுதல் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து, தீவிர சிகிச்சையில் இருந்த மனைவி ஜோதிலட்சுமியை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு கிடத்தி கணவர் சோழன் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து சோழன் தனது போராட்டத்தைக் கைவிட்டார். பின்னர், ஜோதிலட்சுமி உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...