கோவை ராம்நகரில் 19 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளை: போலீஸ் விசாரணை

கோவை ராம்நகரில் வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 19 பவுன் நகை மற்றும் ரூ.92,000 பணம் திருடப்பட்டுள்ளது. காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


கோவை: கோவை ராம்நகர் பகுதியில் வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 19 பவுன் நகை மற்றும் ரூ.92,000 பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ராம்நகர் சரோஜினி தெருவைச் சேர்ந்த முஸ்ரத்துல்லாவின் மனைவி ஷெரீன் (32) கடந்த ஜூலை 11 ஆம் தேதி தனது குடும்ப உறுப்பினர்களுடன் ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றார். செல்லும் முன் தான் அணிந்திருந்த நெக்லஸ், கம்மல், வளையல் உள்ளிட்ட 19 பவுன் நகைகள் மற்றும் ரூ.92,000 பணத்தை பீரோவில் வைத்து பூட்டி விட்டுச் சென்றார்.

ஜூலை 28 ஆம் தேதி வீடு திரும்பிய ஷெரீன், பீரோவைத் திறந்து பார்த்தபோது அதில் வைத்திருந்த நகைகள் மற்றும் பணம் காணாமல் போயிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஷெரீன் உடனடியாக காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் காட்டூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டதற்கான அடையாளங்கள் ஏதும் இல்லாததால், வழக்கம்போல் வீட்டிற்கு வந்து செல்பவர்கள் மீதும் சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிகிறது.

கோவை நகரில் அடிக்கடி நடைபெறும் இத்தகைய திருட்டு சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. போலீசார் விரைவில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நகைகளை மீட்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...