தாராபுரம் அருகே ரூ.8 லட்சம் மதிப்பிலான புதிய சமையல் கூடத்தை திறந்து வைத்தார் அமைச்சர் கயல்விழி செல்வராஜ்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குண்டடம் அடுத்த சேடபாளையம் அரசு மாதிரி பள்ளியில் ரூ.8 லட்சம் மதிப்பிலான புதிய சமையல் கூடத்தை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் பல்வேறு அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் அடுத்துள்ள சேடபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மாதிரி பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட சமையல் கூடத்தை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திறந்து வைத்தார்.

இந்த அரசு மாதிரி பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இதுவரை சமையல் கூடம் இல்லாமல் இருந்த இந்தப் பள்ளிக்கு, தாராபுரம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து சுமார் 8 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய சமையல் கூடம் கட்டப்பட்டது.



அமைச்சர் கயல்விழி செல்வராஜ் புதிய சமையல் கூடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றினார். அதன் பின்னர், புதிதாக கட்டப்பட்டுள்ள ஒவ்வொரு அறையையும் பார்வையிட்டார். இந்நிகழ்வில் ருத்ராவதி பேரூர் கழக செயலாளர் அன்பரசு முன்னிலை வகித்தார்.

இந்த திறப்பு விழாவில் பேரூராட்சி கவுன்சிலர் ஆறுமுகம், மாவட்ட பிரதிநிதிகள் தங்கவேல், நந்தகோபால், வார்டு பிரதிநிதி ரமேஷ், ராமகிருஷ்ணன், இளைஞர் அணி கனகசபாபதி, விஸ்வநாதன், கோகுலகிருஷ்ணன், கார்த்திக், செல்வகுமார் மற்றும் அரசு மாதிரி பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...