வால்பாறையில் கனமழை: மண்சரிவு ஏற்பட்டு குடியிருப்பின் மீது விழுந்ததில் பாட்டி-பேத்தி பரிதாப உயிரிழப்பு

வால்பாறை சோலையார் அணைப்பகுதியில் கனமழையால் மண்சரிவு ஏற்பட்டு, குடியிருப்பின் மீது விழுந்ததில் பாட்டி-பேத்தி உயிரிழந்தனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.


Coimbatore: வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சோலையார் அணைப்பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட மண்சரிவில் பாட்டி-பேத்தி பரிதாபமாக உயிரிழந்தனர்.

வால்பாறை அருகே உள்ள சோலையார் அணைப்பகுதியில் 'இடது கரை' என்ற இடத்தில் ராஜேஸ்வரி (வயது 42) மற்றும் அவரது பேத்தி ஜனனபிரியா (வயது 14) ஆகியோர் தங்களது குடியிருப்பில் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது இரவு பெய்த கனமழையால் அருகில் இருந்த மண் குன்று இடிந்து குடியிருப்பின் மீது விழுந்தது.



இந்த சம்பவத்தில் குடியிருப்பு சேதமடைந்ததோடு, தூங்கிக் கொண்டிருந்த ராஜேஸ்வரி மற்றும் ஜனனபிரியா மீது கற்கள் விழுந்து இருவரும் உயிரிழந்தனர். காலையில் அருகில் உள்ளவர்கள் இதனை கண்டு காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரும் பொதுமக்களும் இணைந்து கற்களை அகற்றி இருவரின் உடல்களையும் மீட்டனர்.

மீட்கப்பட்ட உடல்கள் பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...