பொள்ளாச்சியில் கனமழை: வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் இளைஞர் பலி

பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டியில் கனமழையால் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் 28 வயது இளைஞர் மற்றும் அவரது செல்லப்பிராணி உயிரிழந்தனர். போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Coimbatore: பொள்ளாச்சி அருகே உள்ள திப்பம்பட்டி கிராமத்தில் கனமழையால் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் 28 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திப்பம்பட்டி கிராமத்தின் அண்ணா தெருவில் வசித்து வந்த அன்பழகன் என்பவரின் மகன் ஹரிஹரசுதன் (28) தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று இரவு தொடர்ந்து பெய்த கனமழையால், ஹரிஹரசுதன் தூங்கிக் கொண்டிருந்த அறையின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் ஹரிஹரசுதன் மற்றும் அவரது செல்லப்பிராணியான நாய்க்குட்டியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.



சுவர் இடிந்து விழுந்த சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்தனர். உடனடியாக ஹரிஹரசுதனின் உடல் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து கோமங்கலம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மழைக்காலத்தில் பழுதடைந்த கட்டிடங்களில் வசிப்பது ஆபத்து என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...