தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.3000 கோடி நிதி கோரி பிரதமருக்கு தபால் அட்டைகள் அனுப்பும் போராட்டம்

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.3000 கோடி நிதி கோரி பிரதமருக்கு தபால் அட்டைகள் அனுப்பும் போராட்டத்தை தொடங்கியது. 1000 தபால் அட்டைகள் அனுப்பப்பட்டன.


Coimbatore: கோவையில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.3000 கோடி நிதி ஒதுக்கக் கோரி மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு தபால் அட்டைகள் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.3000 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரதமருக்கு 10,000 தபால் அட்டைகள் அனுப்பும் போராட்டத்தை மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் அறிவித்துள்ளது. முதற்கட்டமாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், பொதுமக்களுக்கும் பேருந்து பயணிகளுக்கும் இது குறித்து துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.



அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகே உள்ள தபால் நிலையத்திலிருந்து பொதுமக்களிடம் கையெழுத்து பெற்ற 1000 தபால் அட்டைகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

மறுமலர்ச்சி மக்கள் இயக்கத் தலைவர் ஈசுவரன் கூறுகையில், "கடந்த பத்து ஆண்டுகளில், மொழிகளின் வளர்ச்சிக்காக இந்திய அரசு ஒதுக்கீடு செய்த நிதியில், 25 ஆயிரம் பேர் மட்டுமே தாய் மொழியாக கொண்ட சமஸ்கிருதத்திற்கு 61% நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளையும் புறக்கணித்துவிட்டு, அடுத்த 50 ஆண்டுகளில் இந்தியாவை சமஸ்கிருத நாடாக மாற்றும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்," என்றார்.



"அடுத்த ஐந்தாண்டுகளில் சமஸ்கிருதத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட தமிழ் மொழிக்கு அதிகமான நிதி ஒதுக்கி தமிழ் மொழியை உலகம் எங்கும் எடுத்துச் செல்ல வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார்.

அனைத்து கல்லூரிகளுக்கும் சென்று மாணவர்களிடத்திலும் கையெழுத்து பெற்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தொடர்ந்து தபால் அட்டைகளை அனுப்பவுள்ளதாகவும் ஈசுவரன் தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...