கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்தின் இரண்டு உதவி ஆய்வாளர்கள் குற்றச்சாட்டுகள் காரணமாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
Coimbatore: கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் குற்றப் புலனாய்வு பிரிவில் பணியாற்றி வந்த இரண்டு உதவி ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை அவர்கள் மீது எழுந்துள்ள பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுத்து எடுக்கப்பட்டுள்ளது.
சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் குற்றப் புலனாய்வு பிரிவில் உதவி ஆய்வாளராக பார்வதி மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளராக யூசுப் ஆகியோர் பணியாற்றி வந்தனர். இவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த இரண்டு அதிகாரிகளையும் கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்து மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் ஜூலை 29 அன்று உத்தரவிட்டார்.
இந்த இரண்டு அதிகாரிகள் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மாநகர காவல் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், விசாரணை முடிந்த பின்னர் இரு அதிகாரிகள் மீதும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் கூறினர்.
சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் குற்றப் புலனாய்வு பிரிவில் உதவி ஆய்வாளராக பார்வதி மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளராக யூசுப் ஆகியோர் பணியாற்றி வந்தனர். இவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த இரண்டு அதிகாரிகளையும் கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்து மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் ஜூலை 29 அன்று உத்தரவிட்டார்.
இந்த இரண்டு அதிகாரிகள் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மாநகர காவல் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், விசாரணை முடிந்த பின்னர் இரு அதிகாரிகள் மீதும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் கூறினர்.