கோவை ஜெம் மருத்துவமனையில் கோவையை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு கணைய கட்டி அகற்றும் அறுவை சிகிச்சை நடந்தது. இந்த அறுவை சிகிச்சை 'ரோபோட்டிக் விப்பிள்' எனப்படும் அதி நவீன சிகிச்சை மூலம் ரோபோக்களை பயன்படுத்தி செய்யபட்டது. இதன் மூலம் உலகிலேயே மிக குறைந்த வயதில் 'ரோபோட்டிக் விப்பிள்' அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்த மருத்துவமனை என்ற சாதனையை ஜெம் மருத்துவமனை நிகழ்த்தியுள்ளது.

இது குறித்து ஜெம் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் பழனிவேல் கூறுகையில், 'இந்த கணைய அறுவை சிகிச்சை மூலம் ஜெம் மருத்துவமனை மீண்டும் தனது திறமையை நிரூபித்துள்ளது. இந்த சிகிச்சை மூலம் குறைந்த நாட்களில் பூரண குணமடைந்து வீடு திரும்ப முடியும். தற்போது 'ரோபோட்டிக் விப்பிள்' மூலம் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சிறுமி முழுவதுமாக குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார்' என்றார்.