எர்ணாகுளம்-பெங்களூரு வந்தே பாரத் ரயிலுக்கு கிருஷ்ணராஜபுரத்தில் கூடுதல் நிறுத்தம்

தெற்கு ரயில்வே, எர்ணாகுளம்-பெங்களூரு வந்தே பாரத் ரயிலுக்கு கிருஷ்ணராஜபுரத்தில் கூடுதல் நிறுத்தம் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை பயணிகளின் வசதிக்காக எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: தெற்கு ரயில்வே நிர்வாகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, எர்ணாகுளத்தில் இருந்து கோவை வழியாக பெங்களூர் செல்லும் வந்தே பாரத் ரயிலுக்கு கூடுதல் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.

எர்ணாகுளம் - பெங்களூரு கண்டோன்மென்ட் இடையே வாராந்திர அடிப்படையில் இயக்கப்படும் வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் ஏற்கனவே திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய இடங்களில் நின்று செல்கின்றன. தற்போது, பயணிகளின் வசதிக்காக கிருஷ்ணராஜபுரத்தில் கூடுதல் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.

புதிய அட்டவணையின்படி, ரயில் எண் 06001 எர்ணாகுளம் - பெங்களூரு கண்டோன்மென்ட் வந்தே பாரத் சிறப்பு ரயில் கிருஷ்ணராஜபுரத்தில் இரவு 9.05 மணிக்கு வந்து 9.07 மணிக்கு புறப்படும். அதேபோல, ரயில் எண் 06002 பெங்களூரு கண்டோன்மென்ட் - எர்ணாகுளம் வந்தே பாரத் சிறப்பு ரயில் கிருஷ்ணராஜபுரத்தில் காலை 5.40 மணிக்கு வந்து, 5.42 மணிக்கு புறப்படும்.

இந்த கூடுதல் நிறுத்தம் பயணிகளுக்கு மேலும் வசதியாக இருக்கும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...