தெற்கு ரயில்வே, எர்ணாகுளம்-பெங்களூரு வந்தே பாரத் ரயிலுக்கு கிருஷ்ணராஜபுரத்தில் கூடுதல் நிறுத்தம் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை பயணிகளின் வசதிக்காக எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: தெற்கு ரயில்வே நிர்வாகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, எர்ணாகுளத்தில் இருந்து கோவை வழியாக பெங்களூர் செல்லும் வந்தே பாரத் ரயிலுக்கு கூடுதல் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.
எர்ணாகுளம் - பெங்களூரு கண்டோன்மென்ட் இடையே வாராந்திர அடிப்படையில் இயக்கப்படும் வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் ஏற்கனவே திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய இடங்களில் நின்று செல்கின்றன. தற்போது, பயணிகளின் வசதிக்காக கிருஷ்ணராஜபுரத்தில் கூடுதல் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.
புதிய அட்டவணையின்படி, ரயில் எண் 06001 எர்ணாகுளம் - பெங்களூரு கண்டோன்மென்ட் வந்தே பாரத் சிறப்பு ரயில் கிருஷ்ணராஜபுரத்தில் இரவு 9.05 மணிக்கு வந்து 9.07 மணிக்கு புறப்படும். அதேபோல, ரயில் எண் 06002 பெங்களூரு கண்டோன்மென்ட் - எர்ணாகுளம் வந்தே பாரத் சிறப்பு ரயில் கிருஷ்ணராஜபுரத்தில் காலை 5.40 மணிக்கு வந்து, 5.42 மணிக்கு புறப்படும்.
இந்த கூடுதல் நிறுத்தம் பயணிகளுக்கு மேலும் வசதியாக இருக்கும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எர்ணாகுளம் - பெங்களூரு கண்டோன்மென்ட் இடையே வாராந்திர அடிப்படையில் இயக்கப்படும் வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் ஏற்கனவே திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய இடங்களில் நின்று செல்கின்றன. தற்போது, பயணிகளின் வசதிக்காக கிருஷ்ணராஜபுரத்தில் கூடுதல் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.
புதிய அட்டவணையின்படி, ரயில் எண் 06001 எர்ணாகுளம் - பெங்களூரு கண்டோன்மென்ட் வந்தே பாரத் சிறப்பு ரயில் கிருஷ்ணராஜபுரத்தில் இரவு 9.05 மணிக்கு வந்து 9.07 மணிக்கு புறப்படும். அதேபோல, ரயில் எண் 06002 பெங்களூரு கண்டோன்மென்ட் - எர்ணாகுளம் வந்தே பாரத் சிறப்பு ரயில் கிருஷ்ணராஜபுரத்தில் காலை 5.40 மணிக்கு வந்து, 5.42 மணிக்கு புறப்படும்.
இந்த கூடுதல் நிறுத்தம் பயணிகளுக்கு மேலும் வசதியாக இருக்கும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.