வால்பாறை மண்சரிவில் இருவர் உயிரிழப்பு: அமைச்சர் முத்துசாமி ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கினார்

வால்பாறையில் சோலையார் அணை இடது கரையில் மண்சரிவு ஏற்பட்டு இரு பெண்கள் உயிரிழந்தனர். அமைச்சர் முத்துசாமி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கினார்.


கோவை: வால்பாறை சோலையார் அணை இடது கரை பகுதியில் மண் சரிந்து வீட்டின் மேல் விழுந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதி உதவியை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.

வால்பாறையில் சோலையார் அணை பகுதியில் இடது கரை என்ற இடத்தில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ராஜேஸ்வரி மற்றும் தனபிரியா ஆகிய இருவர் மீது வீட்டின் மேல் மண் சரிந்து விழுந்ததில் அவர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் வால்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் குறித்து தமிழக முதலமைச்சர் இரங்கல் தெரிவித்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மூன்று லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்தார்.





இதைத் தொடர்ந்து, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி மருத்துவமனைக்குச் சென்று, உயிரிழந்த இருவரின் உடல்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

அமைச்சர் முத்துசாமி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, தலா மூன்று லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். மேலும், அவர்களுக்குத் தேவையான பொருள் உதவிகளையும் செய்தார்.



பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், "இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வால்பாறை பகுதியில் அதிக மழை காரணமாக மண் சரிந்து குடியிருப்பின் மேல் விழுந்ததால் இவர்கள் உயிரிழந்துள்ளனர். முதலமைச்சரின் உத்தரவின்படி தலா 3 லட்சம் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது," என்றார்.

மேலும், விபத்து நிவாரணமாக 4 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்றும், கட்சி சார்பாக 50,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். சோலையார் அணை பகுதியில் உள்ள குடியிருப்புகளை ஆய்வு செய்து, மக்கள் வசிப்பதற்கு ஏற்ற பாதுகாப்பான இடங்கள் உள்ளனவா என்பதை மாவட்ட ஆட்சியர் மூலம் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் முத்துசாமி கூறினார்.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...