கோவை சுங்கம் பைபாஸில் போலீஸ் வாகன சோதனையின் போது, குடிபோதையில் வந்த லாரி ஓட்டுநர் முகமது நஸ்ருதீன் போலீசாருடன் தகராறு செய்ததால் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் ஜூலை 29 அன்று நடந்தது.
கோவை: கோவை உக்கடம் போலீசார் சுங்கம் பைபாஸ் சாலையில் உள்ள மின் வாரிய அலுவலகம் அருகே ஜூலை 29 அன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வாகனங்களில் வந்தவர்களை நிறுத்தி, அவர்களது ஆவணங்களை சரிபார்த்தனர்.
இந்நிலையில், உக்கடம் ஜி.எம். நகரைச் சேர்ந்த முகமது நஸ்ருதீன் (24) என்ற லாரி ஓட்டுநரை போலீசார் சோதனை செய்தபோது, அவர் மது அருந்தியிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த முகமது நஸ்ருதீன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தேவகுமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தார். இது தொடர்பாக தேவகுமார் உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில், தண்ணீர் லாரி ஓட்டுநரான முகமது நஸ்ருதீன் மீது போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், உக்கடம் ஜி.எம். நகரைச் சேர்ந்த முகமது நஸ்ருதீன் (24) என்ற லாரி ஓட்டுநரை போலீசார் சோதனை செய்தபோது, அவர் மது அருந்தியிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த முகமது நஸ்ருதீன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தேவகுமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தார். இது தொடர்பாக தேவகுமார் உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில், தண்ணீர் லாரி ஓட்டுநரான முகமது நஸ்ருதீன் மீது போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.