கேரள வெள்ளப் பாதிப்பு: கோவை மாநகராட்சி மீட்பு உபகரணங்களை அனுப்பி வைத்தது

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, கோவை மாநகராட்சி ஆணையாளர் மா. சிவகுரு பிரபாகரன் தலைமையில் மீட்பு வாகனங்கள் மற்றும் குளிர் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டன.


Coimbatore: கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள இயற்கை பேரிடர் மீட்பு பணிக்காக கோயமுத்தூர் மாவட்டத்தின் சார்பில், கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலக வளாகத்தில், மீட்பு வாகனங்கள் (Hitachi vehicle) மற்றும் குளிர் பெட்டிகளை (Freezer Box) மாநகராட்சி ஆணையாளர் மா. சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப அவர்கள் நேற்று (30.07.2024) நள்ளிரவு அனுப்பி வைத்தார்.

இந்த நிகழ்வில் துணை மேயர் ரா.வெற்றி செல்வன், தெற்கு மண்டல குழு தலைவர் தனலட்சுமி, துணை ஆணையர் க. சிவகுமார், மாநகர தலைமை பொறியாளர் அன்பழகன், உதவி ஆணையர் செந்தில்குமரன், செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் எழில், உதவி பொறியாளர் சபரி ராஜ், மாமன்ற உறுப்பினர்கள் பாபு, அஸ்லாம் பாஷா, இளஞ்சேகரன், ராஜலட்சுமி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



இந்த முயற்சி கேரளாவின் வெள்ளப் பாதிப்பு பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவை மாநகராட்சியின் இந்த உதவி, மாநிலங்களுக்கு இடையேயான ஒற்றுமையையும், பேரிடர் காலங்களில் ஒருவருக்கொருவர் உதவும் மனப்பான்மையையும் எடுத்துக்காட்டுகிறது.

Newsletter

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர...

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...