பொள்ளாச்சியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: 78 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

பொள்ளாச்சியில் 3.5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 78 வயது முதியவருக்கு கோவை POCSO நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ₹5.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 3.5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 78 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியின் மூன்றரை வயது மகள், தனது பாட்டியுடன் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி, இ.பி.நகரில் உள்ள ஓய்வுபெற்ற மின் வாரிய ஊழியரான முருகன் (78) வீட்டிற்கு சென்றிருந்தார். கடந்த பிப்ரவரி மாதம், வீட்டின் முதல் மாடியில் சிறுமி விளையாடிக் கொண்டிருந்தபோது, முருகன் அவருக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

இது தொடர்பாக சிறுமியின் பாட்டி பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, போக்ஸோ மற்றும் பாலியல் வன்கொடுமை சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கோவை போக்ஸோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

கடந்த ஜூலை 31 ஆம் தேதி, நீதிபதி ஜி.குலசேகரன் வழங்கிய தீர்ப்பில், குற்றவாளியான முருகனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்தார். அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் ஓர் ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.5 லட்சமும், அபராதத் தொகையான ரூ.10,000-ம் சேர்த்து மொத்தம் ரூ.5.10 லட்சம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார். இந்த தீர்ப்பானது குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...