பொள்ளாச்சியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: 78 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

பொள்ளாச்சியில் 3.5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 78 வயது முதியவருக்கு கோவை POCSO நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ₹5.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 3.5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 78 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியின் மூன்றரை வயது மகள், தனது பாட்டியுடன் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி, இ.பி.நகரில் உள்ள ஓய்வுபெற்ற மின் வாரிய ஊழியரான முருகன் (78) வீட்டிற்கு சென்றிருந்தார். கடந்த பிப்ரவரி மாதம், வீட்டின் முதல் மாடியில் சிறுமி விளையாடிக் கொண்டிருந்தபோது, முருகன் அவருக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

இது தொடர்பாக சிறுமியின் பாட்டி பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, போக்ஸோ மற்றும் பாலியல் வன்கொடுமை சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கோவை போக்ஸோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

கடந்த ஜூலை 31 ஆம் தேதி, நீதிபதி ஜி.குலசேகரன் வழங்கிய தீர்ப்பில், குற்றவாளியான முருகனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்தார். அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் ஓர் ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.5 லட்சமும், அபராதத் தொகையான ரூ.10,000-ம் சேர்த்து மொத்தம் ரூ.5.10 லட்சம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார். இந்த தீர்ப்பானது குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...