கோவையில் ரூ.3 கோடி மதிப்புள்ள பொது ஒதுக்கீட்டு இடம் 40 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்பு

கோவை மாநகராட்சி 51வது வார்டில் உள்ள கிருஷ்ணா நகரில் 16 சென்ட் பொது ஒதுக்கீட்டு இடம் 40 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்கப்பட்டது. இந்த இடம் 2007ல் தனிநபருக்கு விற்கப்பட்டிருந்தது.


Coimbatore: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட 51வது வார்டில் உள்ள கிருஷ்ணா நகரில் ரூ.3 கோடி மதிப்புள்ள பொது ஒதுக்கீட்டு இடம் 40 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளது.

1980ஆம் ஆண்டு 7 ஏக்கர் பரப்பளவில் 100 மனைகளாக பிரிக்கப்பட்ட கிருஷ்ணா நகரில், 16 சென்ட் நிலம் பொது ஒதுக்கீட்டு இடமாக ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், 2007ஆம் ஆண்டு இந்த இடம் வரன்முறை செய்யப்பட்டு தனிநபருக்கு விற்கப்பட்டது. அப்போது அந்த இடத்தில் இருந்த கிணறும் மூடப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து 2019ஆம் ஆண்டு சமூக செயல்பாட்டாளர் தியாகராஜன் மாநகராட்சி மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் புகார் அளித்தார். இதையடுத்து, ஆக்கிரமிப்புதாரருக்கு மூன்று முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டும், அவர் நேரடி விசாரணைக்கு வரவில்லை.

இந்நிலையில், மாநகராட்சி ஆணையர் M. சிவகுரு பிரபாகரன் உத்தரவின் பேரில், உதவி நகரமைப்பு அலுவலர் புவனேஸ்வரி தலைமையிலான குழு ஆகஸ்ட் 1ஆம் தேதி கிருஷ்ணா நகர் பகுதிக்குச் சென்று, பொது ஒதுக்கீட்டு இடத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

அந்த இடத்தில் இருந்த இரும்புத் தகடுகள் மற்றும் முட்புதர்கள் அகற்றப்பட்டன. பின்னர், "இந்த இடம் மாநகராட்சிக்கு சொந்தமான பொது ஒதுக்கீட்டு இடம்" என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. தற்போது இந்த இடத்தின் மதிப்பு சுமார் ரூ.3 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...