கோவை சிறைச்சாலை அணிவகுப்பு மைதானத்தில் அரசுப்பொருட்காட்சி நாளை துவக்கம்

கோவை சிறைச்சாலை காவலர் அணிவகுப்பு மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி நாளை (ஏப்ரல் 23) மாலை 5 மணிக்கு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைக்கிறார்.

நாளை தொடங்கும் இப்பொருட்காட்சியானது தொடர்ந்து 45 நாட்கள் நடைபெற உள்ளது. இவ்விழாவின் துவக்க நாளன்று அமைச்சர்கள் பங்கேற்று, மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார்கள். மேலும் இதில், தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன், மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் ஆகியோர் முன்னிலை வகிக்கவுள்ளனர்.

செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் ஜெ.குமரகுருபரன் நன்றியுரையாற்ற உள்ளார். இவ்விழாவிற்கு கோவை, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

இந்த பொருட்காட்சி ஒவ்வொரு நாளும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் சென்றுவர ஏதுவாக சிறப்பு பேருந்து வசதிகள் மற்றும் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி போன்ற அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இதில் அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை விளக்கும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை, சுற்றுலாத்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வனத்துறை, வேளாண்மைத்துறை, காவல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட 27 துறைகளின் சார்பாக அரங்குகளும், அரசு சார்பு நிறுவனங்களுக்கான தமிழ்நாடு உப்புக்கழகம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், ரிசர்வ் வங்கி, ஆவின், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், கோயம்புத்தூர் மாநகராட்சி ஆகியவற்றின் சார்பிலும் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், தனியார் அரங்குகளும், பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெறவுள்ளன. தினந்தோறும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த பொருட்காட்சி தொடக்கவிழாவில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறும், பொதுமக்கள் அனைவரும் இப்பொருட்காட்சியை பார்வையிட்டு பயன்பெறுமாறும் கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...