கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களிலுள்ள மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்களை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.19.73 கோடி மதிப்பிலான 1.69 ஏக்கர் மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டு மாநகராட்சியின் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று தகவல் தெரிவித்தார்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், “கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலம், சௌரிபாளையம், வார்டு-66, உடையம்பாளையம் சாலையில் பொது ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.5.8 கோடி மதிப்பிலான 29.34 சென்ட் அளவிலான இடங்களும், மேற்கு மண்டலம், வீரகேரளம், வார்டு-19, குறிச்சி நகரில் பொது ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.2.5 கோடி மதிப்பிலான 26 சென்ட் அளவிலான இடங்களும் மீட்கப்பட்டுள்ளது.
மேலும், வார்டு-19, குறிச்சி நகரில் சுமார் ரூ.2.5 கோடி மதிப்பிலான 25 சென்ட் இடங்களும், வடக்கு மண்டலம், துடியலூர், வார்டு- 3, சத்யா நகரில் சுமார் ரூ.2.5 கோடி மதிப்பிலான 30 சென்ட் அளவிலான இடங்களும் மீட்கப்பட்டது.
அதேப்போன்று, தெற்கு மண்டலம், குறிஞ்சி, வார்டு-94, ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ1.4 கோடி மதிப்பிலான 12 சென்ட் அளவிலான இடங்களும், மத்திய மண்டலம், ராமநந்தா புரம், வார்டு-74, சுமார் ரூ5.03 கோடி மதிப்பிலான 46.26 சென்ட் அளவிலான இடங்களும் என மொத்தம் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.19.73 கோடி மதிப்பிலான 1.69 ஏக்கர் மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டு மாநகராட்சியின் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
மேலும, இதுபோன்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.” இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், “கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலம், சௌரிபாளையம், வார்டு-66, உடையம்பாளையம் சாலையில் பொது ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.5.8 கோடி மதிப்பிலான 29.34 சென்ட் அளவிலான இடங்களும், மேற்கு மண்டலம், வீரகேரளம், வார்டு-19, குறிச்சி நகரில் பொது ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.2.5 கோடி மதிப்பிலான 26 சென்ட் அளவிலான இடங்களும் மீட்கப்பட்டுள்ளது.
மேலும், வார்டு-19, குறிச்சி நகரில் சுமார் ரூ.2.5 கோடி மதிப்பிலான 25 சென்ட் இடங்களும், வடக்கு மண்டலம், துடியலூர், வார்டு- 3, சத்யா நகரில் சுமார் ரூ.2.5 கோடி மதிப்பிலான 30 சென்ட் அளவிலான இடங்களும் மீட்கப்பட்டது.
அதேப்போன்று, தெற்கு மண்டலம், குறிஞ்சி, வார்டு-94, ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ1.4 கோடி மதிப்பிலான 12 சென்ட் அளவிலான இடங்களும், மத்திய மண்டலம், ராமநந்தா புரம், வார்டு-74, சுமார் ரூ5.03 கோடி மதிப்பிலான 46.26 சென்ட் அளவிலான இடங்களும் என மொத்தம் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.19.73 கோடி மதிப்பிலான 1.69 ஏக்கர் மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டு மாநகராட்சியின் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
மேலும, இதுபோன்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.” இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.