பாராளுமன்றத்தில் ராகுல் காந்தியை விமர்சித்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரை கண்டித்து பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை: பாராளுமன்றத்தில் ராகுல் காந்தியை விமர்சித்து பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரை கண்டித்து பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாராளுமன்றக் கூட்டத்தில் ஜாதி வாரிய கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தி பேசிய போது, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் "என்ன ஜாதி" என ராகுல் காந்தியை விமர்சித்துள்ளார். இந்த விமர்சனத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தெற்கு மாவட்டத் தலைவர் பகவதி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பாராளுமன்றத்தில் ராகுல் காந்தியை விமர்சனம் செய்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரை கண்டித்தும், பிரதமர் மோடியை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியினர், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரின் செயலை வன்மையாக கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
பாராளுமன்றக் கூட்டத்தில் ஜாதி வாரிய கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தி பேசிய போது, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் "என்ன ஜாதி" என ராகுல் காந்தியை விமர்சித்துள்ளார். இந்த விமர்சனத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தெற்கு மாவட்டத் தலைவர் பகவதி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பாராளுமன்றத்தில் ராகுல் காந்தியை விமர்சனம் செய்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரை கண்டித்தும், பிரதமர் மோடியை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியினர், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரின் செயலை வன்மையாக கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.