கோவை மாநகராட்சி 1-வது வார்டில் பல்வேறு அபிவிருத்தி பணிகள்: கவுன்சிலர் கற்பகம் ராஜசேகரன் ஆய்வு

கோவை மாநகராட்சி 1-வது வார்டில் பாதாள சாக்கடை, சாலை சுத்தம், அங்கன்வாடி நடைபாதை மற்றும் வடிகால் சுத்தம் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி பணிகளை வார்டு கவுன்சிலர் கற்பகம் ராஜசேகரன் ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாநகராட்சி 1-வது வார்டுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் அபிவிருத்தி பணிகளை வார்டு கவுன்சிலர் கற்பகம் ராஜசேகரன் நேரில் ஆய்வு செய்தார்.

அப்பநாயக்கன்பாளையம் ஈஸ்வர சக்தி நகர் பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணியினை கவுன்சிலர் கற்பகம் ராஜசேகரன் நேரில் பார்வையிட்டார். இப்பணியினை தரமாக செய்திட வேண்டுமென ஒப்பந்ததாரரிடம் வலியுறுத்தினார்.



பார்க்சிட்டி பகுதியில் சாலையில் கழிவுகள் கொட்டப்பட்டதால் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, கவுன்சிலர் நேரில் பார்வையிட்டு அந்த பகுதியை சுத்தம் செய்ய உத்தரவிட்டார்.



அப்பநாயக்கன்பாளையம் அங்கன்வாடி பள்ளியின் முன்புறம் குழந்தைகள் நடந்து செல்வதற்காக நடைபாதை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.



மேலும், வார்டு முழுவதும் வடிகால் சுத்தம் செய்யும் பணிகள் மற்றும் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகளை கவுன்சிலர் கற்பகம் ராஜசேகரன் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...