அருந்ததியர் உள் ஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்று கோவை காந்திபுரத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் தலைமையில் கொண்டாட்டம் நடைபெற்றது. இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து மகிழ்ச்சி வெளிப்படுத்தப்பட்டது.
கோவை: கோவை காந்திபுரத்தில் அருந்ததியர் உள் ஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் தலைமையில் கொண்டாட்டம் நடைபெற்றது.

2009ஆம் ஆண்டு தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு அருந்ததியினருக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கியது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், 2020ஆம் ஆண்டு ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு தமிழ்நாடு அரசின் அருந்ததியர் உள் ஒதுக்கீடு சட்டம் செல்லும் என தீர்ப்பளித்தது.
இந்நிலையில், தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான ஏழு நீதிபதிகள் அமர்வு நேற்று வழங்கிய தீர்ப்பில், அரசியலமைப்புச் சட்டத்தின் 14வது பிரிவை உள் ஒதுக்கீடு மீறவில்லை எனவும், பட்டியல் வகுப்பினர் வரையறையில் இருந்து உள்பிரிவுகள் விலக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டு, உள் ஒதுக்கீடு வழங்குவதில் தடையில்லை என அறிவித்தது.

இத்தீர்ப்பை வரவேற்று, கோவை காந்திபுரத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து மகிழ்ச்சி வெளிப்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் ஆதித்தமிழர் பேரவை ரவிக்குமார், திராவிட தமிழர் கட்சி செந்தில், புரட்சி கழக முன்னணி மலரவன், தந்தை பெரியார் திராவிடர் கழகம் காமராஜ், கோவில்பிள்ளை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
2009ஆம் ஆண்டு தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு அருந்ததியினருக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கியது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், 2020ஆம் ஆண்டு ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு தமிழ்நாடு அரசின் அருந்ததியர் உள் ஒதுக்கீடு சட்டம் செல்லும் என தீர்ப்பளித்தது.
இந்நிலையில், தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான ஏழு நீதிபதிகள் அமர்வு நேற்று வழங்கிய தீர்ப்பில், அரசியலமைப்புச் சட்டத்தின் 14வது பிரிவை உள் ஒதுக்கீடு மீறவில்லை எனவும், பட்டியல் வகுப்பினர் வரையறையில் இருந்து உள்பிரிவுகள் விலக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டு, உள் ஒதுக்கீடு வழங்குவதில் தடையில்லை என அறிவித்தது.
இத்தீர்ப்பை வரவேற்று, கோவை காந்திபுரத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து மகிழ்ச்சி வெளிப்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் ஆதித்தமிழர் பேரவை ரவிக்குமார், திராவிட தமிழர் கட்சி செந்தில், புரட்சி கழக முன்னணி மலரவன், தந்தை பெரியார் திராவிடர் கழகம் காமராஜ், கோவில்பிள்ளை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.