கோவையில் ஆகஸ்ட் 4-ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச செயற்கை கைகள், கால்கள் வழங்கும் முகாம்

கோவையில் ஆகஸ்ட் 4-ம் தேதி நாராயண் சேவா சன்ஸ்தான் அமைப்பு மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச செயற்கை கைகள் மற்றும் கால்கள் வழங்கும் முகாமை நடத்துகிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பயனாளிகள் பங்கேற்க உள்ளனர்.


Coimbatore: கோவையில் வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச செயற்கை கைகள் மற்றும் கால்கள் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. இராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நாராயண் சேவா சன்ஸ்தான் எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் இந்த முகாமை நடத்துகிறது.

இந்த முகாமில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பயனாளிகள் கலந்து கொள்ள உள்ளனர். உதய்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நாராயண் சேவா சன்ஸ்தான் அமைப்பு, இந்தியா மட்டுமின்றி ஆப்பிரிக்க நாடுகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை கால் மற்றும் கைகளை இலவசமாகப் பொருத்தும் முகாம்களை நடத்தி வருகிறது.



தமிழகத்தில் முதன்முறையாக கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் மற்றும் கைகள் அமைப்பதற்கான அளவீடு எடுக்கும் முதல் கட்ட முகாம் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதில் தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.

அளவீடுகள் செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவக் குழுவினரின் உதவியுடன் செயற்கை கால் மற்றும் கைகளைப் பொருத்தும் முகாம் வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி நடைபெற உள்ளது.

இது குறித்து நாராயண் சேவா சன்ஸ்தான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் பகவான் பிரசாந்த் கவுர் கூறுகையில், "செயற்கை கால் மற்றும் கைகள் அளவீடுகள் கொடுத்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் இந்த முகாமில் பங்கேற்று பயனடையுமாறு வேண்டுகோள் விடுக்கிறோம்" என்றார்.

முன்னதாக முகாம் தொடர்பான விழிப்புணர்வு சுவரொட்டியை தன்னார்வலர்கள் சந்தோஷ் முண்டாடா, கமல் கிஷோர், கவுர் ஆகியோர் வெளியிட்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...