கோவையில் திருமணம் செய்வதாக கூறி ரூ.2 லட்சம் மோசடி செய்த பெண் கைது

கோவையில் திருமணம் செய்வதாக கூறி ரூ.2 லட்சம் மோசடி செய்த விஸ்வதர்சினி என்ற பெண்ணை ஆர்.எஸ்.புரம் போலீசார் கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே பல மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன.


Coimbatore: கோவையில் திருமணம் செய்வதாக கூறி ரூ.2 லட்சம் மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த முத்துராமலிங்கம் (57) என்பவர் இரண்டாவது திருமணம் செய்ய முயற்சித்து வந்தார். இந்நிலையில், கோவை ஆர்.எஸ்.புரம் மேற்கு பொன்னுரங்கம் வீதியைச் சேர்ந்த விஸ்வதர்சினி (48) என்பவருடன் அறிமுகமானார். இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்ததாக தெரிகிறது.

2020ஆம் ஆண்டு, விஸ்வதர்சினி தனது மகன் வெளிநாட்டுக் கல்லூரியில் படிப்பதற்காக 10 லட்ச ரூபாய் தேவை என்றும், தன்னிடம் 8 லட்ச ரூபாய் இருப்பதாகவும், மீதி 2 லட்ச ரூபாய் வேண்டும் என்றும் முத்துராமலிங்கத்திடம் கேட்டார். முத்துராமலிங்கம் 2 லட்ச ரூபாய் கொடுத்தார். ஆனால் விஸ்வதர்சினி பணத்தைத் திருப்பித் தரவில்லை மற்றும் திருமணமும் செய்யவில்லை.

இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசில் முத்துராமலிங்கம் புகார் அளித்தார். விசாரணையில், விஸ்வதர்சினி மீது சென்னை ராயப்பேட்டை மகளிர் போலீசிலும் இதே போன்ற ஒரு வழக்கு பதிவாகியிருந்தது தெரியவந்தது. மேலும், செல்வபுரத்தில் மோசடி வழக்கும், வடவள்ளி போலீஸ் நிலையத்தில் மிரட்டல் வழக்கும் பதிவாகியுள்ளது.

ஏற்கனவே கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த விஸ்வதர்சினியை, முத்துராமலிங்கம் அளித்த புகாரின் பேரில் ஆர்.எஸ்.புரம் போலீசார் தேடி வந்தனர். ஆகஸ்ட் 1 இரவு பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...