'புத்தகம் வந்த பின்தான் குரங்கிலிருந்து மனிதன் வெளிப்பட்டான்' உலக புத்தக தின விழாவில் -மரபின் மைந்தன் முத்தையா பேச்சு

உலக புத்தக தினமான இன்று கோவை ஏ.டி.டி காலனி பகுதியில் உள்ள 'தி இந்து' நாளிதழ் அலுவலகத்தில் உலக புத்தக தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. 



உலக புத்தக தினத்தையொட்டி தி இந்து-வின் பதிப்பு புத்தகங்கள் 50 சதவிகிதம் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டது. காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும் இந்நிகழ்வில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று புத்தகங்களை வாங்கிச் சென்றனர். விழாவில் மரபின் மைந்தன் முத்தையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

 

அப்போது, வாசகர்களிடையே அவர் பேசுகையில், 'குழந்தைகளுக்கு நூல்களை கண்ணில் காட்டுங்கள், அவர்கள் படிக்க மாட்டார்கள் என்பதை நாம் தீர்மானிக்க வேண்டாம். புத்தகத்தை வாசிக்க தொடங்கிய பின்னர்தான் குரங்கிலிருந்து மனிதன் வெளிப்படத் தொடங்கினான். ஒவ்வொரு புத்தகத்தையும் உங்கள் வீடுகளில் குடியேற்றும் போதும்தான் ஒரு அறிஞரை உங்கள் வீட்டுக்கு குடியேற்றுவதாக அர்த்தம்' என்றார்.

 

இவ்விழாவில் கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் சரவணன் மற்றும் 'தி இந்து' நாளிதழின் துணை மண்டல மேலாளர் ஜெகதீஸ்குமார், கோவை புத்தக திருவிழா குழுவினர் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...