முத்துராமலிங்க தேவர் குறித்த அவதூறு: யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது

கோவையில், முத்துராமலிங்க தேவர் குறித்து அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவரது விடுதலை கேள்விக்குறியாக உள்ளது.


Coimbatore: கோவை மாவட்டத்தில், முத்துராமலிங்க தேவர் தொடர்பாக அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த காலங்களில் பெண் காவல் துறையினரையும், காவல்துறை உயர் அதிகாரிகளையும் அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் மீது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர் மீது குண்டர் தடுப்பு சட்டமும் பாயப்பட்டதால், ஜாமினில் வெளியே வர முடியாமல் இருந்தார்.

பின்னர் உச்சநீதிமன்றம் சென்று சில வழக்குகளுக்கு ஜாமின் பெற்ற சவுக்கு சங்கர், தமிழகத்திலும் ஒவ்வொரு வழக்கிலும் ஜாமின் பெற்று வந்தார். இந்நிலையில், கோவை மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் முத்து என்பவர் கடந்த மே 15 அன்று யூடியூபர் சவுக்கு சங்கர் மீது ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து, கோவை மத்திய சிறையில் முத்துராமலிங்க தேவர் பற்றி அவதூறாக பேசியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் சவுக்கு சங்கரை ஆகஸ்ட் 2 அன்று கைது செய்த ரேஸ்கோர்ஸ் போலீசார், அவரை சென்னையில் இருந்து கோவைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் சவுக்கு சங்கர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அந்த வழக்குகள் அனைத்திலும் அவர் ஜாமின் பெற்றால் மட்டுமே வெளியே வர முடியும். அதுவரை அவர் சிறையில் தான் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...