பங்கு சந்தை முதலீட்டில் ரூ.34 லட்சம் மோசடி: இரண்டு பேர் கைது

கோவையில் பங்கு சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டித் தருவதாகக் கூறி ரூ.34 லட்சம் மோசடி செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 152 பேரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.


Coimbatore: கோவை சுங்கம் பகுதியைச் சேர்ந்த அருண் குமார் என்பவர் மாநகர சைபர் கிரைம் காவல் துறையில் புகார் அளித்திருந்தார். அதில், ஆன்லைனில் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்ற தகவல் அவருக்கு வந்ததாகவும், இதனை நம்பி அவர் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணில் தொடர்பு கொண்டு பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.

லாபத்துடன் முதலீடு செய்வது தொடர்பான வீடியோவை வாட்ஸ்அப்பில் அனுப்பியதாகவும், பணம் அனுப்பினால் பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டித் தருவதாகக் கூறியதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. இதனை நம்பி அருண் குமார் பல்வேறு தவணைகளாக ரூ.34 லட்சம் அனுப்பியுள்ளார்.

லாபத் தொகை குறித்துக் கேட்டபோது பணம் முதிர்வு அடைவதாகத் தெரிவித்ததாகவும், பின்னர் லாபத் தொகையையும் முதலீட்டுத் தொகையையும் திரும்பக் கேட்டபோது தராமல் மோசடி செய்துவிட்டதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், செல்போன் எண்கள் மற்றும் பல்வேறு ஆன்லைன் தகவல்களின் அடிப்படையில் துடியலூரைச் சேர்ந்த தனசேகரன் மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ரவி சந்துரு ஆகிய இருவரை ஜூலை 1 அன்று கைது செய்தனர்.

கைதான இருவரிடமிருந்து பல்வேறு வங்கிகளின் நூற்றுக்கணக்கான காசோலைப் புத்தகங்கள், கிரெடிட் கார்டுகள், ஏ.டி.எம் கார்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அவர்களிடம் நடத்திய விசாரணையில், பங்குச் சந்தையில் லாபம் பெற்றுத் தருவதாகக் கூறி தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 152 பேரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...