கலைஞரின் 6வது நினைவு தினம்: கோவையில் திமுக சார்பில் அமைதிப் பேரணி

கோவையில் கலைஞர் கருணாநிதியின் 6வது நினைவு தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி திமுக சார்பில் அமைதிப் பேரணி நடத்தப்படும் என்று மாவட்ட செயலாளர் நா. கார்த்திக் அறிவித்துள்ளார்.


Coimbatore: கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் முன்னாள் எம்எல்ஏ, கலைஞர் கருணாநிதியின் 6வது நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெறவுள்ள நிகழ்வுகள் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அவரது அறிவிப்பின்படி, ஆகஸ்ட் 7ஆம் தேதி காலை 8 மணிக்கு கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் "அமைதிப் பேரணி" நடைபெறும். இந்த பேரணி கோவை சித்தாபுதூர், வி.கே.கே.மேனன் சாலை, ஆவாரம்பாளையம் சாலை சந்திப்பில் இருந்து புறப்பட்டு, காந்திபுரம் அண்ணா சிலை அருகில் உள்ள முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியுடன் நிறைவடையும்.

கார்த்திக் தனது அறிவிப்பில், கலைஞர் கருணாநிதியை "தகைமைசால் தலைவர், தலைசிறந்த நிர்வாகி, தமிழ்நாட்டின் ஐந்து முறை முதலமைச்சர், உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர்" என்று புகழ்ந்துள்ளார். மேலும், கலைஞர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக ஏறத்தாழ 50 ஆண்டுகள் பொறுப்பு வகித்ததையும், அகில இந்திய அரசியலில் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்ததையும் நினைவுகூர்ந்துள்ளார்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...