மேட்டுப்பாளையம் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி சார்பில் உலக புத்தக தினவிழா

உலக புத்தக தினத்தை முன்னிட்டு மேட்டுப்பாளையம் கல்லாறு பகுதியில் அமைந்துள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி மாணவ மாணவிகள் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் கலைநிகழ்ச்சி மற்றும் சொற்பொழிவு நடத்தினார்கள்.



விழாவிற்கு பள்ளி செயலாளர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் தலைமை தாங்கினார். துணைச்செயலாளர் ஞானபண்டிதன் வரவேற்றார். மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் நூலகத்தை திறந்து வைத்தார். மேட்டுப்பாளையம் பகுதிகளை சேர்ந்த அரசு பள்ளிகளுக்கு ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை கவிஞர் கவிதாசன் வழங்கி சிறப்புரை ஆற்றினார். பள்ளி மாணவர்கள் புத்தகம் படிப்பதின் அவசியம், பற்றியும், படித்து உயர்ந்த உலகத்தலைவர்கள் பற்றியும் உரையாற்றினார்கள். 



விழாவில் சவிதா மருத்துவமனை டாக்டர் சசித்ரா, தமிழ்நாடு அறிவியல் இயக்க செயலாளர் மணி, நுகர்வோர் இயக்க தலைவர் ரெயின்போ வெங்கடராமன், சேவ் பவானி அமைப்பின் நிர்வாகி மணி, ரோட்டரி சங்க நிர்வாகி சுந்தர கணேஷ், உறுப்பினர் ஜெயராமன், அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள், உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் முதல்வர் உமா மகேஸ்வரி நன்றி கூறினார். பொதுமக்கள் படித்து பயன்பெற பல்வேறு தலைப்புக்கள் இடம்பெற்ற புத்தக கண்காட்சி நடந்தது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...