உலக புத்தக தினத்தை முன்னிட்டு மேட்டுப்பாளையம் கல்லாறு பகுதியில் அமைந்துள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி மாணவ மாணவிகள் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் கலைநிகழ்ச்சி மற்றும் சொற்பொழிவு நடத்தினார்கள்.

விழாவிற்கு பள்ளி செயலாளர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் தலைமை தாங்கினார். துணைச்செயலாளர் ஞானபண்டிதன் வரவேற்றார். மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் நூலகத்தை திறந்து வைத்தார். மேட்டுப்பாளையம் பகுதிகளை சேர்ந்த அரசு பள்ளிகளுக்கு ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை கவிஞர் கவிதாசன் வழங்கி சிறப்புரை ஆற்றினார். பள்ளி மாணவர்கள் புத்தகம் படிப்பதின் அவசியம், பற்றியும், படித்து உயர்ந்த உலகத்தலைவர்கள் பற்றியும் உரையாற்றினார்கள்.

விழாவில் சவிதா மருத்துவமனை டாக்டர் சசித்ரா, தமிழ்நாடு அறிவியல் இயக்க செயலாளர் மணி, நுகர்வோர் இயக்க தலைவர் ரெயின்போ வெங்கடராமன், சேவ் பவானி அமைப்பின் நிர்வாகி மணி, ரோட்டரி சங்க நிர்வாகி சுந்தர கணேஷ், உறுப்பினர் ஜெயராமன், அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள், உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் முதல்வர் உமா மகேஸ்வரி நன்றி கூறினார். பொதுமக்கள் படித்து பயன்பெற பல்வேறு தலைப்புக்கள் இடம்பெற்ற புத்தக கண்காட்சி நடந்தது.

விழாவிற்கு பள்ளி செயலாளர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் தலைமை தாங்கினார். துணைச்செயலாளர் ஞானபண்டிதன் வரவேற்றார். மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் நூலகத்தை திறந்து வைத்தார். மேட்டுப்பாளையம் பகுதிகளை சேர்ந்த அரசு பள்ளிகளுக்கு ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை கவிஞர் கவிதாசன் வழங்கி சிறப்புரை ஆற்றினார். பள்ளி மாணவர்கள் புத்தகம் படிப்பதின் அவசியம், பற்றியும், படித்து உயர்ந்த உலகத்தலைவர்கள் பற்றியும் உரையாற்றினார்கள்.

விழாவில் சவிதா மருத்துவமனை டாக்டர் சசித்ரா, தமிழ்நாடு அறிவியல் இயக்க செயலாளர் மணி, நுகர்வோர் இயக்க தலைவர் ரெயின்போ வெங்கடராமன், சேவ் பவானி அமைப்பின் நிர்வாகி மணி, ரோட்டரி சங்க நிர்வாகி சுந்தர கணேஷ், உறுப்பினர் ஜெயராமன், அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள், உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் முதல்வர் உமா மகேஸ்வரி நன்றி கூறினார். பொதுமக்கள் படித்து பயன்பெற பல்வேறு தலைப்புக்கள் இடம்பெற்ற புத்தக கண்காட்சி நடந்தது.