கோவை மதுகரை அருகே கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்ற இருவர் கைது

கோவை மதுகரை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சந்தேகத்தின் பேரில் இருவரை சோதனையிட்டதில், 150 கிராம் கஞ்சா மற்றும் 55 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.


Coimbatore: கோவை சுந்தராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, ஆகஸ்ட் 2 ஆம் தேதி மதுக்கரை ரோட்டில் உள்ள சத்தியமூர்த்தி நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி சோதனை செய்தார்.

சோதனையின் போது, அவர்களிடமிருந்து 150 கிராம் கஞ்சா மற்றும் 55 போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டன. உடனடியாக இருவரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் கோவை சுந்தராபுரம் ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த மோகன் மகன் சிஜு (வயது 25) மற்றும் சிட்கோ சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த தேவராஜ் மகள் ஷர்மிளா (வயது 27) என அடையாளம் காணப்பட்டனர்.

விசாரணையில், சிஜு ஒரு லேத் ஒர்க் ஷாப்பில் டர்னராக வேலை செய்து வருவதும், ஷர்மிளா B.Com., C.A. படித்து முடித்து ஆடிட்டராக பணிபுரிந்து வருவதும் தெரிய வந்தது. இவர்களிடமிருந்து கஞ்சா, போதை மாத்திரைகள், எடை இயந்திரம், மூன்று செல்போன்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த வழக்கில் மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர். போதைப் பொருட்கள் விற்பனை செய்த இந்த இருவரும் எவ்வாறு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர், யாரிடமிருந்து இவற்றை பெற்றனர் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...