உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோயிலில் 1000க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாட்டு வண்டியில் சிறப்பு வழிபாடு

அடி அமாவாசையை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோயிலில் 1000க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாட்டு வண்டிகளில் வந்து சிறப்பு வழிபாடு செய்தனர். முன்னோர்களின் அறிவுரையின்படி இந்த வழிபாடு கால்நடைகளின் நலனுக்காக மேற்கொள்ளப்படுகிறது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் திருக்கோயிலில் அடி அமாவாசையை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் குவிந்தனர். மேலும் பலர் ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு திரளான பொதுமக்கள் தர்பணம் கொடுத்தனர்.

உடுமலை, பொள்ளாச்சி, Dharapuram, கிணத்துக்கடவு, திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து சுமார் 1000க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது மாட்டுவண்டிகளில் வருகை புரிந்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.



முன்னோர்கள் கூறிய அறிவுரையின்படி, தங்களது கால்நடைகள் நோய் நொடியின்றி, நீண்ட நாட்கள் நலமுடன் இருக்க இரட்டை மாட்டுவண்டிகளுடன் அடி அமாவாசையன்று திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் தரிசனம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்றும், காங்கேயம் இன நாட்டு மாடுகள் வளர்ச்சி பெருகும் என்றும் விவசாயிகள் நம்புகின்றனர்.

"பல ஆண்டுகளாக முன்னோர்கள் கூறிய அறிவுரையின் பேரில் இங்கு வருகிறோம். இதனால் கால்நடைகள் நோய் நொடியின்றி நலமாக தொடர்ந்து இருப்பதாக உணர்கிறோம்," என விவசாயிகள் தெரிவித்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...