கோவையில் செம்மொழி பூங்கா பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்கள்; நகராட்சி, மாநகராட்சி காலிப் பணியிடங்களுக்கு விரைவில் தேர்வு

கோவையில் செம்மொழி பூங்கா பணிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி ஆய்வு செய்தனர். நகராட்சி, மாநகராட்சி காலிப் பணியிடங்களுக்கு விரைவில் தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.


Coimbatore: கோவை மத்திய சிறை மைதானத்தில் நடைபெற்று வரும் செம்மொழி பூங்கா பணிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் முத்துசாமி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது கோவை மாநகராட்சி ஆணையர் M சிவகுரு பிரபாகரன், கோவை மாவட்ட ஆட்சியர் Kranthi Kumar Pati மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, "168 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இப்பணிகள் நடைபெற்று வருகின்றன. முதலமைச்சரின் உத்தரவின்படி, வரும் டிசம்பர் மாதம் பணிகள் முடிவடைந்து திறக்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த ஆய்வை மேற்கொண்டோம்," என்றார்.



அமைச்சர் தொடர்ந்து பேசுகையில், "நகராட்சி, மாநகراட்சிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 2,500 பேருக்கு தேர்வு நடத்த உள்ளோம். இதில் 85 சதவீதம் பேருக்கு தேர்வு முறையிலும், 15 சதவீதம் பேருக்கு நேர்காணல் முறையிலும் ஆட்களைத் தேர்வு செய்ய உள்ளோம். விரைவில், பத்து நாட்களில் பொறியாளர்கள் உதவியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்," என்று தெரிவித்தார்.

கோவை மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட 330 தீர்மானங்கள் குறித்தும் அமைச்சர் கருத்து தெரிவித்தார். "இந்தத் தீர்மானங்களை ஆராய்ந்து, மக்களுக்குத் தேவையானவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து அனைத்தையும் நிறைவேற்றுவோம்," என்றார்.



கோவை மேயர் நியமனம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், "இது தொடர்பாக முதலமைச்சர் சொல்வதைத்தான் அறிவிப்போம். இது குறித்து மதியம் தெரிவிப்போம்," என முடித்துக் கொண்டார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...