கோவை பீளமேடு: தொழிலதிபர் வீட்டில் 43 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளை

கோவை பீளமேடு பகுதியில் தொழிலதிபர் மோனிஷ் ராஜனின் வீட்டில் பூட்டை உடைத்து 43 பவுன் நகை மற்றும் ரூ.1.5 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்த நேரத்தில் இந்த கொள்ளை நடந்துள்ளது.


கோவை: கோவை பீளமேடு, சேரன்மாநகர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் செல்வராஜின் மகன் மோனிஷ் ராஜன் (27) வாடகை வீட்டில் வசித்து வருகிறார். திருவண்ணாமலையில் பிளாஸ்டிக் கம்பெனி நடத்தி வரும் மோனிஷ் ராஜன், கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி தனது தாயாருடன் தாராபுரத்தில் உள்ள குலதெய்வக் கோவிலுக்குச் சென்றிருந்தார்.

ஆகஸ்ட் 4ஆம் தேதி வீடு திரும்பிய போது, வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 43 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பணம் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இது குறித்து மோனிஷ் ராஜன் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் தமிழரசு வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்த நேரத்தைப் பயன்படுத்தி திருடர்கள் இந்தக் கொள்ளையை நடத்தியிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இந்த சம்பவம் பீளமேடு பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்லும் போது அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்து செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், கொள்ளையர்களை விரைவில் கைது செய்ய சிசிடிவி கேமரா காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்களை சேகரித்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...