கோவை மருதமலை பகுதியில் யானைகளை கண்காணிக்க சிறப்பு குழு அமைப்பு

கோவை மருதமலை சுற்றுவட்டாரத்தில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், வனத்துறை இரவு நேர கண்காணிப்புக்கு 6 பேர் கொண்ட சிறப்பு குழுவை அமைத்துள்ளது. இது பகுதியில் யானை-மனித மோதல்களைத் தடுக்க உதவும்.


கோவை: கோவை வனச்சகரத்திற்கு உட்பட்ட மருதமலை சுற்றுவட்டார பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதை அடுத்து, வனத்துறை சார்பில் முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க, இரவு நேரத்தில் பணியாற்றும் சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் வனவர், வனக்காப்பாளர் உள்ளிட்ட 6 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த சிறப்பு குழுவினர், யானைகள் அதிகம் நடமாடும் பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன் மூலம், யானைகளின் நடமாட்டம் குறித்த தகவல்களை உடனுக்குடன் பெற முடியும் என்பதோடு, யானை-மனித மோதல்களையும் தடுக்க முடியும் என வனத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...