கோவை இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்: மூளைச்சாவுக்குப் பின் 5 உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சைக்கு பயன்பாடு

கோவையில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 22 வயது இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. பெற்றோரின் சம்மதத்துடன் 5 உறுப்புகள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டன.


Coimbatore: கோவை காளம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஸ்ரீராம் என்பவர் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார். அவரது பெற்றோரின் முடிவின்படி, அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.


கடந்த ஆகஸ்ட் 3 அன்று இருசக்கர வாகனத்தில் சென்றபோது தடுமாறி விழுந்த ஸ்ரீராம், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 4 அன்று அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முன்வந்தனர்.


தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, ஆகஸ்ட் 5 அன்று அவரது சிறுநீரகங்கள், கல்லீரல், கணையம் மற்றும் கண்கள் தானமாக வழங்கப்பட்டன. இவற்றில் கணையம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கல்லீரல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் மற்றும் கண்கள் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் சேலம் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டன.


இதன் பின்னர், ஸ்ரீராமின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் Dr. அ.நிர்மலா உள்ளிட்ட மருத்துவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இந்த உன்னதமான உடல் உறுப்பு தானம் மூலம் பல உயிர்கள் காக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...