காரமடையில் வீடு புகுந்து 17 சவரன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் திருட்டு

காரமடை குட்டையூரில் குலதெய்வ கோவிலுக்கு சென்ற தம்பதியின் வீட்டில் திருடர்கள் புகுந்து 17 சவரன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் பணத்தை திருடிச் சென்றனர். காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Coimbatore: காரமடை குட்டையூர் கவுண்டர் வீதியைச் சேர்ந்த தம்பதி ராஜு - அங்கம்மாள் ஆகியோரின் வீட்டில் திருட்டு சம்பவம் நடந்துள்ளது. இத்தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று இக்குடும்பத்தினர் வந்தவாசியில் உள்ள தங்களது குலதெய்வ கோவிலுக்குச் சென்றுள்ளனர். இன்று (ஆகஸ்ட் 6) காலை வீடு திரும்பி வந்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உள்ளே சென்று பார்த்தபோது, 17 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப் பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக இச்சம்பவம் குறித்து காரமடை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

தகவல் அறிந்து விரைந்து வந்த காரமடை காவல்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். திருடர்களைக் கண்டுபிடிக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...