கோவை மாநகரில் சுமார் 2 ஆயிரம் தண்ணீர் லாரிகள் இயங்கி வருகிறது. இவர்கள் போர் மூலம் தண்ணீர் எடுத்து பொதுமகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கோவை மாநகராட்சி சார்பில் ஆழ்குழாய் கிணறு மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்பு விதி 406- படி உத்தரவு ஒன்று வெளியிடப்பட்டதும் அதில், குடிநீர் தட்டுப்பாடு காரணமாக தனியார் அமைப்பு நிலத்தடி நீரை எடுத்து விற்பனை செய்ய கூடாது என்றும், தடையை மீறி நிலத்தடி நீரை உறிஞ்சினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

மாநகராட்சியின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, கோவை மாவட்ட குடிநீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை கோவை கொடிசியா வளாகத்தில் தங்களது லாரிகளை நிறுத்தி போராட்டத்தை தொடங்கினர்.
இந்த வேலை நிறுத்தத்தால் கோவை மாநகரில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த தொழிலை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கோவை மாநகராட்சி சார்பில் ஆழ்குழாய் கிணறு மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்பு விதி 406- படி உத்தரவு ஒன்று வெளியிடப்பட்டதும் அதில், குடிநீர் தட்டுப்பாடு காரணமாக தனியார் அமைப்பு நிலத்தடி நீரை எடுத்து விற்பனை செய்ய கூடாது என்றும், தடையை மீறி நிலத்தடி நீரை உறிஞ்சினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

மாநகராட்சியின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, கோவை மாவட்ட குடிநீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை கோவை கொடிசியா வளாகத்தில் தங்களது லாரிகளை நிறுத்தி போராட்டத்தை தொடங்கினர்.
இந்த வேலை நிறுத்தத்தால் கோவை மாநகரில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த தொழிலை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.