நிலத்தடி நீரை எடுக்கக் கூடாது என்ற மாநகராட்சி உத்தரவை தொடர்ந்து தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

கோவை மாநகரில் சுமார் 2 ஆயிரம் தண்ணீர் லாரிகள் இயங்கி வருகிறது. இவர்கள் போர் மூலம் தண்ணீர் எடுத்து பொதுமகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். 



இந்த நிலையில் நேற்று முன்தினம் கோவை மாநகராட்சி சார்பில் ஆழ்குழாய் கிணறு மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்பு விதி 406- படி உத்தரவு ஒன்று வெளியிடப்பட்டதும் அதில், குடிநீர் தட்டுப்பாடு காரணமாக தனியார் அமைப்பு நிலத்தடி நீரை எடுத்து விற்பனை செய்ய கூடாது என்றும், தடையை மீறி நிலத்தடி நீரை உறிஞ்சினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.



மாநகராட்சியின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, கோவை மாவட்ட குடிநீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை கோவை கொடிசியா வளாகத்தில் தங்களது லாரிகளை நிறுத்தி போராட்டத்தை தொடங்கினர்.

 

இந்த வேலை நிறுத்தத்தால் கோவை மாநகரில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த தொழிலை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...