உடுமலையில் உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

உடுமலையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பல்வேறு அமைப்புகள் இணைந்து நடத்திய இப்பேரணியில் அங்கன்வாடி பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. உடுமலை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து இந்த பேரணியை நடத்தினர்.



பேரணி உடுமலை தளி ரோடு பிரிவில் தொடங்கி, மத்திய பேருந்து நிலையம் வழியாக சென்று ரயில்வே சந்திப்பு பாதையில் நிறைவடைந்தது. இப்பேரணியில் 50க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள், 40க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தனியார் கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தீபா பேரணிக்கு தலைமை தாங்கினார். குழந்தைகள் வளர்ச்சி திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் சந்தியப்பிரியா, எண்ணம் போல் வாழ்க்கை அமைப்பின் நிறுவனர் நெல்சன் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...