மேட்டுப்பாளையத்தில் 5 ஆண்டுகளாக விவசாயத்தையும் குடியிருப்புகளையும் சேதப்படுத்தும் பாகுபலி யானையை பிடித்து தொலைதூரத்தில் விடக்கோரி தமிழக விவசாய சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை: மேட்டுப்பாளையத்தில் பாகுபலி எனப்படும் யானையை பிடித்து தொலைதூரத்தில் விடக்கோரி தமிழக விவசாய சங்கத்தினர் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த 5 ஆண்டுகளாக மேட்டுப்பாளையம் பகுதியில் ஒரு யானை தினமும் விவசாய நிலங்களையும், குடியிருப்பு பகுதிகளையும் சேதப்படுத்தி வருகிறது. இந்த யானை பாகுபலி என அழைக்கப்படுகிறது. இந்த யானையால் ஏற்படும் தொடர் சேதங்களை தடுக்க கோரி, அதனை பிடித்து தொலைதூரத்தில் விட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டம் ஆகஸ்ட் 6 ஆம் தேதி மேட்டுப்பாளையத்தில் உள்ள கோ-ஆப்ரேட்டிவ் காலனியில் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகளும் அவர்களது குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில், போராட்டக்காரர்கள் மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலகத்திற்குச் சென்றனர். அங்கு வனச்சரக அலுவலர் ஜோசப் ஸ்டாலினை சந்தித்து தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர்.
கடந்த 5 ஆண்டுகளாக மேட்டுப்பாளையம் பகுதியில் ஒரு யானை தினமும் விவசாய நிலங்களையும், குடியிருப்பு பகுதிகளையும் சேதப்படுத்தி வருகிறது. இந்த யானை பாகுபலி என அழைக்கப்படுகிறது. இந்த யானையால் ஏற்படும் தொடர் சேதங்களை தடுக்க கோரி, அதனை பிடித்து தொலைதூரத்தில் விட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டம் ஆகஸ்ட் 6 ஆம் தேதி மேட்டுப்பாளையத்தில் உள்ள கோ-ஆப்ரேட்டிவ் காலனியில் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகளும் அவர்களது குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில், போராட்டக்காரர்கள் மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலகத்திற்குச் சென்றனர். அங்கு வனச்சரக அலுவலர் ஜோசப் ஸ்டாலினை சந்தித்து தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர்.