திருப்பூரில் கலைஞரின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

திருப்பூரில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 6ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.


Coimbatore: திருப்பூரில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திருப்பூர் மாநகர் மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் தலைமையில் மாநகராட்சி அலுவலகம் முன்பு இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. முதலில், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் கலைஞரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.



தொடர்ந்து, மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநகர் மாவட்ட செயலாளர் நாகராஜ், மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட தலைவர்கள் கலைஞரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பல்வேறு இடங்களிலும் கலைஞரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. முத்தமிழறிஞர் கலைஞரின் அரசியல் மற்றும் இலக்கியப் பங்களிப்புகளை நினைவு கூர்ந்து, அவரது வழியில் தொடர்ந்து செயல்பட உறுதியேற்றனர் கட்சி நிர்வாகிகள்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...