கோவில்பாளையத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: காவலர் போக்சோவில் கைது

கோவில்பாளையத்தில் எட்டாம் வகுப்பு மாணவியை மிரட்டி பணம் கேட்டு, பாலியல் தொல்லை கொடுத்த காவலர் ரவிக்குமார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் பெற்றோர் புகாரைத் தொடர்ந்து வெளிச்சத்திற்கு வந்தது.


Coimbatore: கோவையை அடுத்த கோவில்பாளையம் பகுதியில் எட்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவில்பாளையம் பகுதியில் எட்டாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனும் ஒரு மாணவியும் அண்மையில் தனியாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது கோவில்பாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் ரவிக்குமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அவர் அந்த மாணவர்கள் இருவரும் தனியாக பேசிக்கொண்டிருப்பதை தனது செல்போனில் புகைப்படம் எடுத்து, அவர்களின் செல்போன் எண்ணையும் வாங்கினார்.

பின்னர் ரவிக்குமார் அந்த மாணவியை செல்போனில் தொடர்பு கொண்டு ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வருமாறு அழைத்தார். அங்கு சென்ற மாணவியிடம் காவலர் ரவிக்குமார் பணம் கேட்டு மிரட்டியதுடன், ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறியதை அடுத்து, மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் காவலர் ரவிக்குமார் மீது புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், காவலர் ரவிக்குமார் மாணவியிடம் பணம் கேட்டு மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானதை அடுத்து, அவரை ஆகஸ்ட் 6 அன்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இச்சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் மீதான நம்பிக்கையை சீர்குலைக்கும் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது கண்டனத்திற்குரியது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...