தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதில் கோவை மாவட்டத்தில் 186 கடைகள் மூடப்பட்டது.
இதனிடையே மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை குடியிருப்பு பகுதியில் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறை தீர்ப்பு முகாமில் கூடலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் காந்தி நகர் சிவசக்தி காலணி பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் டாஸ்மாக் கடை திறக்க மாவட்ட நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடையினை அமைக்க தடை விதிக்க வேண்டும் எனவும் மனு அளித்தனர்.
சட்டவிரோதமாக மதுபான விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை கோரி மனு
இதேப்போல் வெங்கட்டாபுரம் 13-வது வார்டுக்கு உட்பட்ட என்.எஸ்.ஆர் ரோடு பகுதியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக கடை நீதிமன்ற உத்தரவையடுத்து மூடபட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக கடையில் சட்டவிரோதமாக மதுபான விற்பனை நடைபெற்று வருகிறது. உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதனிடையே மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை குடியிருப்பு பகுதியில் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறை தீர்ப்பு முகாமில் கூடலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் காந்தி நகர் சிவசக்தி காலணி பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் டாஸ்மாக் கடை திறக்க மாவட்ட நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடையினை அமைக்க தடை விதிக்க வேண்டும் எனவும் மனு அளித்தனர்.
சட்டவிரோதமாக மதுபான விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை கோரி மனு
இதேப்போல் வெங்கட்டாபுரம் 13-வது வார்டுக்கு உட்பட்ட என்.எஸ்.ஆர் ரோடு பகுதியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக கடை நீதிமன்ற உத்தரவையடுத்து மூடபட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக கடையில் சட்டவிரோதமாக மதுபான விற்பனை நடைபெற்று வருகிறது. உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.