குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் மனு

தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதில் கோவை மாவட்டத்தில் 186 கடைகள் மூடப்பட்டது.

இதனிடையே மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை குடியிருப்பு பகுதியில் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

 



இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறை தீர்ப்பு முகாமில் கூடலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் காந்தி நகர் சிவசக்தி காலணி பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் டாஸ்மாக் கடை திறக்க மாவட்ட நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடையினை அமைக்க தடை விதிக்க வேண்டும் எனவும் மனு அளித்தனர்.

சட்டவிரோதமாக மதுபான விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை கோரி மனு

இதேப்போல் வெங்கட்டாபுரம் 13-வது வார்டுக்கு உட்பட்ட என்.எஸ்.ஆர் ரோடு பகுதியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக கடை நீதிமன்ற உத்தரவையடுத்து மூடபட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக கடையில் சட்டவிரோதமாக மதுபான விற்பனை நடைபெற்று வருகிறது. உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...