கோவை மாவட்டம், காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருவதையொட்டி பார்க்கேட் அருகில் ரவுண்டானா அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.

இதற்காக, அப்பகுதியில் இடையூராக இருந்த சுமார் 60 ஆண்டுகால பழமைவாய்ந்த அரச மரம் உள்ளிட்ட மரங்களை வெட்டி அகற்ற நெடுஞ்சாலைத் துறையினர் முடிவுசெய்துள்ளனர்.
பின், அதனை வேருடன் அகற்றி மறுவாழ்வு அளிக்க முடிவு செய்த நெடுஞ்சாலை, மாநகராட்சி, போக்குவரத்து காவல்துறையினர் ஆகியோர் ஓசை அமைப்பின் சையது அவர்களைத் தொடர்புகொண்டு மரத்தினை வேருடன் அகற்றி மாற்று இடத்தில் நட உதவிகோரியுள்ளனர்.
அதனைத்தொடர்ந்து, ஓசை சையது தலைமையிலான அமைப்பினர் மற்றும் காவல்துறையினர், மாநகராட்சி ஊழியர்கள் ஆகியோர் இணைந்து அந்த அரச மரத்தினை வேருடன் அகற்றி கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் மறுநடவு செய்தனர்.

மரம் மறுநடவு செய்யப்பட்டு ஒருவார காலத்திலேயே தற்போது துளிர்விட்டு வளரத் துவங்கியுள்ளது இப்பணியில் ஈடுபட்ட அனைத்துத் தரப்பினரையும், சமூக ஆர்வலர்களையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதற்காக, அப்பகுதியில் இடையூராக இருந்த சுமார் 60 ஆண்டுகால பழமைவாய்ந்த அரச மரம் உள்ளிட்ட மரங்களை வெட்டி அகற்ற நெடுஞ்சாலைத் துறையினர் முடிவுசெய்துள்ளனர்.
பின், அதனை வேருடன் அகற்றி மறுவாழ்வு அளிக்க முடிவு செய்த நெடுஞ்சாலை, மாநகராட்சி, போக்குவரத்து காவல்துறையினர் ஆகியோர் ஓசை அமைப்பின் சையது அவர்களைத் தொடர்புகொண்டு மரத்தினை வேருடன் அகற்றி மாற்று இடத்தில் நட உதவிகோரியுள்ளனர்.
அதனைத்தொடர்ந்து, ஓசை சையது தலைமையிலான அமைப்பினர் மற்றும் காவல்துறையினர், மாநகராட்சி ஊழியர்கள் ஆகியோர் இணைந்து அந்த அரச மரத்தினை வேருடன் அகற்றி கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் மறுநடவு செய்தனர்.

மரம் மறுநடவு செய்யப்பட்டு ஒருவார காலத்திலேயே தற்போது துளிர்விட்டு வளரத் துவங்கியுள்ளது இப்பணியில் ஈடுபட்ட அனைத்துத் தரப்பினரையும், சமூக ஆர்வலர்களையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.