கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் மறுவாழ்வு பெற்ற அரசமரம்

கோவை மாவட்டம், காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருவதையொட்டி பார்க்கேட் அருகில் ரவுண்டானா அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. 



இதற்காக, அப்பகுதியில் இடையூராக இருந்த சுமார் 60 ஆண்டுகால பழமைவாய்ந்த அரச மரம் உள்ளிட்ட மரங்களை வெட்டி அகற்ற நெடுஞ்சாலைத் துறையினர் முடிவுசெய்துள்ளனர். 

பின், அதனை வேருடன் அகற்றி மறுவாழ்வு அளிக்க முடிவு செய்த நெடுஞ்சாலை, மாநகராட்சி, போக்குவரத்து காவல்துறையினர் ஆகியோர் ஓசை அமைப்பின் சையது அவர்களைத் தொடர்புகொண்டு மரத்தினை வேருடன் அகற்றி மாற்று இடத்தில் நட உதவிகோரியுள்ளனர்.

அதனைத்தொடர்ந்து, ஓசை சையது தலைமையிலான அமைப்பினர் மற்றும் காவல்துறையினர், மாநகராட்சி ஊழியர்கள் ஆகியோர் இணைந்து அந்த அரச மரத்தினை வேருடன் அகற்றி கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் மறுநடவு செய்தனர்.



மரம் மறுநடவு செய்யப்பட்டு ஒருவார காலத்திலேயே தற்போது துளிர்விட்டு வளரத் துவங்கியுள்ளது இப்பணியில் ஈடுபட்ட அனைத்துத் தரப்பினரையும், சமூக ஆர்வலர்களையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...