கவி அருவியில் தடுப்பு வேலிகள் தற்காலிகமாக சீரமைக்கப்படுகின்றன

கோவை மாவட்டம் கவி அருவியில் வெள்ளப்பெருக்கால் சேதமடைந்த தடுப்பு வேலிகள் தற்போது சீரமைக்கப்படுகின்றன. சுற்றுலாப் பயணிகளுக்கான குளிக்கும் தடை தொடர்கிறது.


Coimbatore: கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள குரங்கு அருவி என்றழைக்கப்படும் கவி அருவியில் தடுப்பு வேலிகளை தற்காலிகமாக சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்ததன் காரணமாக கவி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் விளைவாக, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டிருந்த தடுப்பு வேலி கம்பிகள் அடித்துச் செல்லப்பட்டன. மேலும், சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.



தற்போது, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை குறைந்ததால் அருவிக்கு நீர் வரத்து குறைந்துள்ளது. இதனால், அருவியில் தடுப்புக் கம்பிகளை தற்காலிகமாக சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. எனினும், அருவிக்கு நீர்வரத்து சீராகாததால் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை நீடிக்கிறது.

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தடுப்பு வேலிகள் முழுமையாக சீரமைக்கப்படும் வரை மற்றும் அருவியின் நீர்வரத்து சீராகும் வரை குளிக்கும் தடை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...