கவி அருவியில் தடுப்பு வேலிகள் தற்காலிகமாக சீரமைக்கப்படுகின்றன

கோவை மாவட்டம் கவி அருவியில் வெள்ளப்பெருக்கால் சேதமடைந்த தடுப்பு வேலிகள் தற்போது சீரமைக்கப்படுகின்றன. சுற்றுலாப் பயணிகளுக்கான குளிக்கும் தடை தொடர்கிறது.


Coimbatore: கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள குரங்கு அருவி என்றழைக்கப்படும் கவி அருவியில் தடுப்பு வேலிகளை தற்காலிகமாக சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்ததன் காரணமாக கவி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் விளைவாக, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டிருந்த தடுப்பு வேலி கம்பிகள் அடித்துச் செல்லப்பட்டன. மேலும், சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.



தற்போது, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை குறைந்ததால் அருவிக்கு நீர் வரத்து குறைந்துள்ளது. இதனால், அருவியில் தடுப்புக் கம்பிகளை தற்காலிகமாக சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. எனினும், அருவிக்கு நீர்வரத்து சீராகாததால் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை நீடிக்கிறது.

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தடுப்பு வேலிகள் முழுமையாக சீரமைக்கப்படும் வரை மற்றும் அருவியின் நீர்வரத்து சீராகும் வரை குளிக்கும் தடை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...